இலங்கையில் ஈழத் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொன்று
குவிக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் உலக தமிழர்கள் மற்றும் இலங்கையில்
உள்ள ஈழத்தமிழர்களால் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இம்முறை முள்ளிவாய்க்கால் தினத்தை ஒட்டி லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது
ஈழத்தழிர்களுக்காக நீதியை வழங்கி இனப்படுகொலையாளிகளை தண்டிப்பதற்கான
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து
கொண்டனர்.