நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலாத்துறைக்கு ஒதுக்குவது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையினை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அதேவேளை பரந்த நுவரெலியா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை எடுத்துரைத்த ஜனாதிபதி, சுற்றுலாத்துறை போன்ற வெளிநாட்டுச் செலாவணி ஈட்டும் நோக்கங்களுக்காக வரலாற்று கட்டிடங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.