யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்ததானம் வங்கியில் அனைத்து குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக யாழ் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை. எனவே இளைஞர் யுவதிகள் இரத்த செய்வதற்கு முன்வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ் இரத்த வங்கி மேலும் தமது அவசர நிலமையினை குறிப்பிட்டுள்ளது.