ஐம்பத்தைந்து வயதான காதலியிடம் தங்க நகைகளை திருடிய 28 வயது காதலனை களனி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராகப் பணிபுரியும் காதலன் பல வருடங்களாக, குறித்த பெண்ணுடன் காதல் தொடர்பை கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முன்வந்ததால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக குறித்த பெண் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், அவரிடமிருந்து தங்கப் பொருட்கள் எதனையும் மீட்க முடியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
55 வயதான காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த 28 வயது காதலன். samugammedia ஐம்பத்தைந்து வயதான காதலியிடம் தங்க நகைகளை திருடிய 28 வயது காதலனை களனி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராகப் பணிபுரியும் காதலன் பல வருடங்களாக, குறித்த பெண்ணுடன் காதல் தொடர்பை கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முன்வந்ததால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக குறித்த பெண் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.எனினும், அவரிடமிருந்து தங்கப் பொருட்கள் எதனையும் மீட்க முடியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.