மட்டு, வவுணதீவில் குளவித் தாக்குதலுக்கு இலக்கான 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7.00 மணியவில் இடம்பெற்றுள்ளது.
குறிஞ்சாமுனை பகுதியில் பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் வீதியால் நடந்து சென்ற மாணவர்களை தாக்கியுள்ளது.
இந்நிலையில், 8 மாணவர்கள் அருகிலுள்ள தாண்டியடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குளவி கூடுகட்டியுள்ள பனை மரங்களில் இருந்து கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.