• May 05 2024

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைமையிலான குழு, வடக்கு மாகாணத்துக்கு விஜயம்! SamugamMedia

Tamil nila / Feb 15th 2023, 10:00 pm
image

Advertisement

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற கௌரவ நீதியரசர் றோகினி மாரசிங்க தலைமையிலான குழுவினர் இம்மாதம் 16 ஆம், 17 ஆம மற்றும் 18 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்துக்கான களவிஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

குறித்த குழுவினர் இவ்வாறு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடனும் பல சந்திப்புக்களை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

 அச்சந்திப்புகளின் பிரதான நோக்கமானது வடக்கு மாகாணத்தின் மனித உரிமைகள் தொடர்பான தற்போதைய கள நிலவரங்களை ஆராய்வதாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தலைமையிலான குழு, வடக்கு மாகாணத்துக்கு விஜயம் SamugamMedia இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற கௌரவ நீதியரசர் றோகினி மாரசிங்க தலைமையிலான குழுவினர் இம்மாதம் 16 ஆம், 17 ஆம மற்றும் 18 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்துக்கான களவிஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,குறித்த குழுவினர் இவ்வாறு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடனும் பல சந்திப்புக்களை மேற்கொள்ளவிருக்கின்றனர். அச்சந்திப்புகளின் பிரதான நோக்கமானது வடக்கு மாகாணத்தின் மனித உரிமைகள் தொடர்பான தற்போதைய கள நிலவரங்களை ஆராய்வதாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement