தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில் காய்ந்த மரம் ஒன்று தலையில் முறிந்து விழுந்ததில் 51 வயதான எம்.டி தமயந்தி என்ற தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை பின்னவலை போலீஸ் பிரிவை சேர்ந்த உடுமலை பகுதியில் வசிக்கும் இவர், தனது கணவருடன் வீட்டு தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த தமயந்தியை பலாங்கொடை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணம் அடைந்துள்ளதாக பின்னவல போலீசார் தெரிவித்துள்ளனர்.