தேசிய சமாதான பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மத சகவாழ்விற்கான முன்னெடுப்பு செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சர்வ சமயக் குழுக்களுக்கு ஊடகங்கள் மற்றும் செய்திகள் தொடர்பில் தெளிவூட்டும் செயலமர்வு இன்று வியாழக்கிழமை(18) காலை 09 மணி தொடக்கம் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் ஜசோதரன் தலைமையில் மாவட்ட ரீதியாக இயங்கி வரும் சர்வ சமய குழுவினரின் பங்குபற்றுதலுடன் தேசிய சமாதான பேரவையின் இணைப்பாளர் உவைஸ் ஊடாக குறித்த தெளிவூட்டும் செயலமர்வு இடம் பெற்றது.
ஊடக தர்மம்,ஊடக செய்திகள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் பொய்யான செய்திகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடபிலும் குறித்த செயலமர்வில் தெளிவூட்டல்கள் இடம் பெற்றது.
குறித்த செயலமர்வில் நான்கு மதத்தலைவர்கள்,சமூதாய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள்,கிராம சேவகர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியளாலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.