யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இரத்ததான முகாமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறைச்சாலையின் 100வது சிறைச்சாலை பாதுகாவலர் அணியின் 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குருதிக்கொடையில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் இந் நிகழ்வின் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், மரக்கன்றுகள் நாட்டியும் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.