• May 05 2024

துணிவு படம் பார்க்க வந்து உயிரிழந்த இளைஞர்- அஜித் எடுத்த முடிவு என்ன தெரியுமா?

Tamil nila / Jan 13th 2023, 11:27 pm
image

Advertisement

துணிவு படத்தினை பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அஜீத் எடுத்ததாக கூறப்படும் முடிவு ஒன்று தகவலாக தற்போது வெளியாகியுள்ளது.



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத், ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டார். கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ள இவரின் திரைப்படம் வெளியீடு என்றாலே ரசிகர்கள் அந்த திரையரங்குகளில் குவிந்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.


இந்நிலையில், 11ம் தேதி இரவு துணிவு படம் வெளியாகியுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட பல பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.



இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி கடந்த 11ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது. வசூலிலும் சாதனை பெற்று வருகின்றது.


இந்நிலையில் சென்னையில் துணிவு படத்தினை முதல் ஷோவில் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர், கொண்டாட்டத்தின் போது உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



சென்னை ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த பரத்குமார் என்பவரே எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.


தற்போது குறித்த இளைஞரின் விபத்தினை கேள்விப்பட்ட அஜீத் அதிர்ச்சியடைந்ததாகவும், இளைஞரின் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு படம் பார்க்க வந்து உயிரிழந்த இளைஞர்- அஜித் எடுத்த முடிவு என்ன தெரியுமா துணிவு படத்தினை பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அஜீத் எடுத்ததாக கூறப்படும் முடிவு ஒன்று தகவலாக தற்போது வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத், ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டார். கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ள இவரின் திரைப்படம் வெளியீடு என்றாலே ரசிகர்கள் அந்த திரையரங்குகளில் குவிந்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.இந்நிலையில், 11ம் தேதி இரவு துணிவு படம் வெளியாகியுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட பல பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி கடந்த 11ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது. வசூலிலும் சாதனை பெற்று வருகின்றது.இந்நிலையில் சென்னையில் துணிவு படத்தினை முதல் ஷோவில் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர், கொண்டாட்டத்தின் போது உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த பரத்குமார் என்பவரே எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.தற்போது குறித்த இளைஞரின் விபத்தினை கேள்விப்பட்ட அஜீத் அதிர்ச்சியடைந்ததாகவும், இளைஞரின் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement