கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அதேவேளை குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பு. சம்பந்தப்பட்ட எம்.பி.யின் பாதுகாப்பை அதிகரிக்கவும். தாக்குதல் குறித்து விரைந்து விசாரணை நடத்தி சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.