தென்னிலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்சவினை எழுச்சி பெற செய்வதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலாக பழ.நெடுமாறன் ஜயாவின் கூற்று அமைந்துள்ளதா என்ற சந்தேகம் உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரான க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சமூகத்தின் செய்திப்பிரிவு எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருந்தார்.
பழ.நெடுமாறனின் கூற்றானது இலங்கை அரசியலில் வௌ;வேறான வகையில் பல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூற்று தென்னிலங்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் க.அருந்தவபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். இருந்தால் தலைவன் இறந்தால் தெய்வம் என்ற வாலியின் வாக்கினை நினைவுபடுத்திய க.அருந்தவபாலன் இந்த காலகட்டத்தில் மீண்டும் பழ.நாடுமாறான் இதனை கூறியது எதற்காக என்பது கேள்வி எழுப்பவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தால் தலைவன் இறந்தால் தெய்வம்: பழ.நெடுமாறனின் கருத்திற்கு அருந்தவபாலன் பதில்SamugamMedia தென்னிலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்சவினை எழுச்சி பெற செய்வதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலாக பழ.நெடுமாறன் ஜயாவின் கூற்று அமைந்துள்ளதா என்ற சந்தேகம் உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரான க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக சமூகத்தின் செய்திப்பிரிவு எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருந்தார்.பழ.நெடுமாறனின் கூற்றானது இலங்கை அரசியலில் வௌ;வேறான வகையில் பல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூற்று தென்னிலங்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் க.அருந்தவபாலன் சுட்டிக்காட்டியுள்ளார்.இருந்தால் தலைவன் இறந்தால் தெய்வம் என்ற வாலியின் வாக்கினை நினைவுபடுத்திய க.அருந்தவபாலன் இந்த காலகட்டத்தில் மீண்டும் பழ.நாடுமாறான் இதனை கூறியது எதற்காக என்பது கேள்வி எழுப்பவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.