• May 05 2024

பல நோய்களை விரட்டும் பலாப்பழம்! 2 சுளை சாப்பிட்டால் நன்மைகள் ஏராளமாம்!

Chithra / Jan 3rd 2023, 12:49 pm
image

Advertisement

பலாப்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட..!

யாழ்ப்பாணத்தில் பலாச்சுளையுடன் புட்டு சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.

பலாப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின், மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.

பலாச்சுளைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி மண் சட்டியில் போட்டு பால் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து தேன், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி நரம்புகள் வலுவடையும்.

கண் நோய்க்கு தீர்வு


பலாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் வராமல் தடுக்கும்.

இதிலுள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாப்பதோடு பெருங்குடலை சுத்தம் செய்ய உதவக்கூடியது.

பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. ஆகவே இதய நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி


அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலாப் பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும். 

பல நோய்களை விரட்டும் பலாப்பழம் 2 சுளை சாப்பிட்டால் நன்மைகள் ஏராளமாம் பலாப்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட.யாழ்ப்பாணத்தில் பலாச்சுளையுடன் புட்டு சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.பலாப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின், மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.பலாச்சுளைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி மண் சட்டியில் போட்டு பால் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து தேன், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி நரம்புகள் வலுவடையும்.கண் நோய்க்கு தீர்வுபலாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் வராமல் தடுக்கும்.இதிலுள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாப்பதோடு பெருங்குடலை சுத்தம் செய்ய உதவக்கூடியது.பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. ஆகவே இதய நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.நோய் எதிர்ப்பு சக்திஅடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலாப் பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும். 

Advertisement

Advertisement

Advertisement