யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(27) காலை இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் க வி விக்னேஸ்வரன் உடல்நலக் குறைவால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமூகமளிக்க முடியாத நிலையில் அவரது சார்பில் யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி மணிவண்ணன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.