அம்பாந்தோட்டையில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் தப்பி செல்ல முயன்ற சந்தேகநபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தப்பி செல்ல முயன்ற குறித்த சந்தேகநபரை துரத்திச்சென்றபோதே பொலிஸ் அதிகாரி மீது இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர் தனமல்வில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது தனமல்வில பிரதேசத்தில் குறித்த சந்தேக நபர் ஒருவரிடத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்று காணிக்குள் ஓடியுள்ளார்.
இதன்போது அவரை பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபரை துரத்திச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கி சூடு. samugammedia அம்பாந்தோட்டையில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் தப்பி செல்ல முயன்ற சந்தேகநபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.தப்பி செல்ல முயன்ற குறித்த சந்தேகநபரை துரத்திச்சென்றபோதே பொலிஸ் அதிகாரி மீது இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு காயமடைந்தவர் தனமல்வில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறப்படுகிறது.சம்பவத்தின் போது தனமல்வில பிரதேசத்தில் குறித்த சந்தேக நபர் ஒருவரிடத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.இந்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்று காணிக்குள் ஓடியுள்ளார்.இதன்போது அவரை பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.