• May 06 2024

யாழில் 100 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள இராஜகோபுரம்..! அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று..!samugammedia

Sharmi / Jun 15th 2023, 12:47 pm
image

Advertisement

மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(15)  காலை இடம் பெற்றது.

ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இராஜகோபுரத்துக்கான அடிக்கல்லை சம்பிரதாயபூர்வமாக  நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவல்கட்டு வட்டார அமைப்பாளர் ந.கவிச்சந்திரன், மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரும் கலந்துகொண்டு இராஜகோபுரத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

யாழில் 100 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள இராஜகோபுரம். அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று.samugammedia மானிப்பாய் சாவல்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நூறு அடி உயரமான இராஜகோபுரற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(15)  காலை இடம் பெற்றது.ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இராஜகோபுரத்துக்கான அடிக்கல்லை சம்பிரதாயபூர்வமாக  நாட்டி வைத்தார்.இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவல்கட்டு வட்டார அமைப்பாளர் ந.கவிச்சந்திரன், மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரும் கலந்துகொண்டு இராஜகோபுரத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement