ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசு தயாராகி வருவதாகவும், மொட்டு கட்சியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால், ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே மொட்டு கட்சி அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.