ஈழத்தில் நடைபெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில் மக்கள் உயிரிழந்த சந்தர்ப்பத்தில் சீமான் தன்னுடன் இணைந்து ஆட்டம் போட்டதாகவும் அதற்கான ஆதாரங்களை வெளியிடவுள்ளதாகவும் நடிகை விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.
சீமான் - விஜயலட்சுமிக்கிடையிலான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சீமானை நடிகை விஜயலக்சுமி எச்சரித்த காணொலியொன்று வெளியாகியுள்ளது.
குறித்த காணொலியூடாக சீமான் ஈழத்தில் நடைபெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில் மக்கள் உயிரிழந்த சந்தர்ப்பத்தில் தன்னுடன் இணைந்து ஆட்டம் போட்டதாகவும் அதற்கான ஆதாரங்களைவெளியிடவுள்ளதாகவும் நடிகை விஜயலக்சுமி எச்சரித்துள்ளார்.
மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்துவதைப் போல் பெண் என்ற ரீதியில் மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார்.
நேரில் பேச திராணியற்று திராவிட முன்னேற்ற கழகத்தவர்களை தன்னுடன் இணைத்து அரசியல் பின்னணியுள்ளதாக தன் மீது குற்றஞ் சுமத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண் என்பதை மனதில் வைத்து நியாயமாக எடுத்துச் சென்றால் எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்படாதெனவும் மாறாக தனக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாகச் செயற்படுமிடத்து தனது கோபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுமனவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பொலிஸ் பாதுகாப்பு காணப்படாமலிருந்திருந்தால் சீமானின் மீது தாக்குதல் நடாத்தியிருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை நேரில் எதிர்கொள்ளத் தைரியமற்று ஊடக சந்திப்புக்களில் பெயருக்கு களங்கமேற்படுத்தும் விதமாக கருத்துக்ளை வெளியிட்டு வருவதாகவும் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் தனது தாக்குதலுக்கு உள்ளாக நேரிடுமெனவும் எச்சரித்துள்ளார்.
இதேவேளை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மிய காலங்களில் ஈழத் தமிழர்கள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாகவும் அனைத்து அரசியல் கள மேடைகளிலும் புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இறுதி யுத்த காலப்பகுதியில் ஈழத் தமிழர்கள் உயிரிழக்கும்போது சீமான் என்னுடன் ஆட்டம் போட்டார். விஜயலட்சுமி பரபரப்பு தகவல் samugammedia ஈழத்தில் நடைபெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில் மக்கள் உயிரிழந்த சந்தர்ப்பத்தில் சீமான் தன்னுடன் இணைந்து ஆட்டம் போட்டதாகவும் அதற்கான ஆதாரங்களை வெளியிடவுள்ளதாகவும் நடிகை விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.சீமான் - விஜயலட்சுமிக்கிடையிலான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சீமானை நடிகை விஜயலக்சுமி எச்சரித்த காணொலியொன்று வெளியாகியுள்ளது.குறித்த காணொலியூடாக சீமான் ஈழத்தில் நடைபெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில் மக்கள் உயிரிழந்த சந்தர்ப்பத்தில் தன்னுடன் இணைந்து ஆட்டம் போட்டதாகவும் அதற்கான ஆதாரங்களைவெளியிடவுள்ளதாகவும் நடிகை விஜயலக்சுமி எச்சரித்துள்ளார்.மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்துவதைப் போல் பெண் என்ற ரீதியில் மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார். நேரில் பேச திராணியற்று திராவிட முன்னேற்ற கழகத்தவர்களை தன்னுடன் இணைத்து அரசியல் பின்னணியுள்ளதாக தன் மீது குற்றஞ் சுமத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பெண் என்பதை மனதில் வைத்து நியாயமாக எடுத்துச் சென்றால் எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்படாதெனவும் மாறாக தனக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாகச் செயற்படுமிடத்து தனது கோபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுமனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் பொலிஸ் பாதுகாப்பு காணப்படாமலிருந்திருந்தால் சீமானின் மீது தாக்குதல் நடாத்தியிருப்பேன் எனவும் கூறியுள்ளார். இதேவேளை நேரில் எதிர்கொள்ளத் தைரியமற்று ஊடக சந்திப்புக்களில் பெயருக்கு களங்கமேற்படுத்தும் விதமாக கருத்துக்ளை வெளியிட்டு வருவதாகவும் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் தனது தாக்குதலுக்கு உள்ளாக நேரிடுமெனவும் எச்சரித்துள்ளார்.இதேவேளை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மிய காலங்களில் ஈழத் தமிழர்கள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாகவும் அனைத்து அரசியல் கள மேடைகளிலும் புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.