கண்டி எசல பெரஹரா திருவிழாவின் நான்காவது ரந்தோலி பெரஹரா வீதி உலா இன்று (29) இரவு இடம்பெறும் போது கண்டி நகரில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று மாலை 7.15 மணிக்கு நான்காவது தலதா ரந்தோலி பெரஹரா இடம்பெறவுள்ளமையினால் வீதியில் பயணிக்கும் மக்களை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.