இலங்கை தமிழ் அரசு கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் திருகோணமலையில் இன்று (24) இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ச.குகதாசன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில், கட்சியின் எதிர்கால ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடப்பட்டன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.