மண்டபம் பகுதி கரையோராத்தினூடாக தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் இன்று(11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்டபம்
முனைக்காடு கடற்கரையில் நேற்று ஆளில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
பைப்பர் படகில் வந்த நபர்களை மரைன் போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில்
மன்னார் பள்ளிமுனையை சேர்ந்த இருவர் சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து படகுமூலம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில்
பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் இன்று மரைன் போலீசார் இருவரையும்
கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரும்
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து படகு
மூலம் இலங்கைக்கு சென்ற நிலையில் மீண்டும் அங்கிருந்து தமிழகம் வந்துள்ளது
விசாரணையில் தெரிய வந்துள்ளது.