• May 06 2024

திடீரென நிறுத்தப்பட்ட விஜயின் லியோ படப்பிடிப்பு: அடுத்தடுத்து தொடரும் சிக்கல்!SamugamMedia

Sharmi / Feb 20th 2023, 10:56 am
image

Advertisement

இளையதளபதி விஜய் நடிப்பில் தைப்பொங்கல் வெளியீடாக வெளியாகிய வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யின் புதிய படத்திற்கான படப்பிடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திலிருந்து த்ரிஷா விலகுவதாக சில வதந்திகள் பரவியது. பின்னர் காஷ்மீர் பகுதியில் இருக்கும் சில வீடியோக்களை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  



இந்த நிலையில் 'லியோ' படக்குழுவின் முக்கியமான ஒரு நபரது வீட்டில் துயர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. 

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான் 'லியோ' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் பிப்ரவரி 18ம் தேதியன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மனோஜ் பரமஹம்சா தாயார் மரணமடைந்த செய்தி கேட்டதும், தனது தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றுவிட்டார். 

இன்னும் சில தினங்களில் அவர் மீண்டும் காஷ்மீருக்கு திரும்பிவிடுவார் என்றும், அதுவரை அவருக்கு பதிலாக மற்றொரு கேமரா மேன் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திடீரென நிறுத்தப்பட்ட விஜயின் லியோ படப்பிடிப்பு: அடுத்தடுத்து தொடரும் சிக்கல்SamugamMedia இளையதளபதி விஜய் நடிப்பில் தைப்பொங்கல் வெளியீடாக வெளியாகிய வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யின் புதிய படத்திற்கான படப்பிடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திலிருந்து த்ரிஷா விலகுவதாக சில வதந்திகள் பரவியது. பின்னர் காஷ்மீர் பகுதியில் இருக்கும் சில வீடியோக்களை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  இந்த நிலையில் 'லியோ' படக்குழுவின் முக்கியமான ஒரு நபரது வீட்டில் துயர சம்பவம் நடைபெற்று இருக்கிறது.  பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான் 'லியோ' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் பிப்ரவரி 18ம் தேதியன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மனோஜ் பரமஹம்சா தாயார் மரணமடைந்த செய்தி கேட்டதும், தனது தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றுவிட்டார்.  இன்னும் சில தினங்களில் அவர் மீண்டும் காஷ்மீருக்கு திரும்பிவிடுவார் என்றும், அதுவரை அவருக்கு பதிலாக மற்றொரு கேமரா மேன் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement