வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பென்னி மோர்டான்ட் (Penny Mourdant) தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு இன்று(12) யாழ்.நகரில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பென்னி மோர்டௌண்டிற்கு ஆளுநர் விளக்கமளித்தார்.
வடமாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கும் பூரண ஆதரவை வழங்குவதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பென்னி மோர்டான்ட் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் (Andrew Patrick) கலந்துகொண்டார்.