• May 06 2024

கொரியாவிலிருந்து தரையிறங்கியது 43 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து!!

crownson / Dec 22nd 2022, 1:50 pm
image

Advertisement

கஷ்டப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கான சர்வதேச பணியகத்தின் பூரண அனுசரணையில் கொரியாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களுக்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பணியகத்தின் இலங்கைக்கான அமைப்பாளர் போதகர் பிரான்சிஸ் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ஆகியோரால் மேற்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக, 43 கோடி ரூபாய் பெருமதியான மருந்து பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் கொரியாவில் இருந்து இலங்கை நாட்டிற்கு இன்றைய தினம் வரவழைக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாட்டின் விளைவாக முறையான சிகிச்சை இன்றி மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகையதொரு சூழ்நிலையில் கொரிய நாட்டில் இருந்து 43 கோடி பெருமதியான மருந்து பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

மருந்து பொருட்கள் பெருந்தோட்ட மலையக பகுதிகளுக்கும் நாட்டில் மருத்துவ தேவைப்பாடு நிலவும் வைத்தியசாலைகளுக்கும்  பகிர்ந்தளிக்க  எண்ணியுள்ளோம்.

மேலும் இந்நிறுவனம் எதிர்காலத்தில் மேலும் சில மருந்து பொருட்களையும், பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களையும் நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளது என்று பணியகத்தின் இலங்கைக்கான அமைப்பாளர் போதகர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 

கொரியாவிலிருந்து தரையிறங்கியது 43 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து கஷ்டப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கான சர்வதேச பணியகத்தின் பூரண அனுசரணையில் கொரியாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களுக்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.பணியகத்தின் இலங்கைக்கான அமைப்பாளர் போதகர் பிரான்சிஸ் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ஆகியோரால் மேற்படி மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக, 43 கோடி ரூபாய் பெருமதியான மருந்து பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் கொரியாவில் இருந்து இலங்கை நாட்டிற்கு இன்றைய தினம் வரவழைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாட்டின் விளைவாக முறையான சிகிச்சை இன்றி மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில் கொரிய நாட்டில் இருந்து 43 கோடி பெருமதியான மருந்து பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.மருந்து பொருட்கள் பெருந்தோட்ட மலையக பகுதிகளுக்கும் நாட்டில் மருத்துவ தேவைப்பாடு நிலவும் வைத்தியசாலைகளுக்கும்  பகிர்ந்தளிக்க  எண்ணியுள்ளோம்.மேலும் இந்நிறுவனம் எதிர்காலத்தில் மேலும் சில மருந்து பொருட்களையும், பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களையும் நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளது என்று பணியகத்தின் இலங்கைக்கான அமைப்பாளர் போதகர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement