உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் உக்ரைன் பெரிய தோல்வியை சந்தித்த போதிலும் உலக நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியால் ரஷ்யாவிற்கு பதிலடி தந்து வருகிறது.
இந்த நிலையில் இரு நாடுகளும் அடிக்கடி ட்ரோன் தாக்குதலை நடத்துகின்றன.
அந்த வகையில் 11 உக்ரேனிய ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டது.
அவற்றில் ஒன்று ரஷ்யாவின் கலுகா பிராந்தியத்திலும் 10 குர்ஸ்க் பிராந்தியத்திலும் வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.