காணாமல் போன பாடசாலை மாணவனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கஹடகஸ்திகிலிய-ஹெட்டுவெவ மஹபொத்தான பகுதியைச் சேர்ந்த ரஹ்மான் ஆதிப் என்ற பாடசாலை மாணவனை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல்-கெகுனுகொல்ல தேசிய பாடசாலை விடுதியில் தங்கி இருந்த போது கொழும்பு நோக்கி சென்றுள்ளதாகவும், நேற்று 16ம் திகதி வாழைத்தோட்டம், புதுக்கடை பகுதியில் நடமாடி திரிந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 0771190530, 0718227451 , 0770883842, 0775020282 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.