பண்ணாகம் புலம்பெயர் சொந்தங்களின் அனுசரனையில் உயிர்காத்த உப்புக் கஞ்சி வழங்கும் பணி இன்றையதினம்(12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரில் 2009 மே 17 வரை முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்றதுடன் இறுதிப் போரின் சாட்சியாகவும் இருக்கும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தலைமையில் கஞ்சி வழங்கல் நிகழ்வு ஆரம்பமாகியது.
அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்று முதல் மே 18 வரை உயிர் காத்த உப்புக் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.