நாட்டில் மலையக தோட்டங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வெற்று காணிகளில் பயிர் செய்கைகள் பயிரிட தோட்டத்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்குவது பற்றி பேச மாட்டீர்களா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உணவு நெருக்கடி, சிறுபோக பிரச்சினை, உணவு பஞ்சம், உணவு பயிரிடுவது, விகாரைகள் அமைப்பது பற்றி பேசப்பட்டது.
ஆனால் மலையக தோட்டத்தொழிலாளர்கள் பற்றி பேசப்படவில்லை. நான் இது பற்றி இதற்கு முன்னரும் அறியப்படுத்தியிருந்தேன்.
இந்நாட்டின் மிக முக்கிய சமுகமாக மலையக மக்கள் காணப்படுகின்றனர். அவர்கள் ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவு மாத்திரமே உற்கொள்கின்றனர்.
எனவே மலையகத்தில் காணப்படும் வெற்று காணிகளில் பயிர்செய்கைகள் மேற்கொள்ள அவர்களுக்கு தயவு செய்து அனுமதி வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்
தோட்டத்தொழிலாளர்களுக்கு வெற்று காணிகளில் பயிர் செய்கை அனுமதி பற்றி பேசப்படாதா - மனோ கேள்வி samugammedia நாட்டில் மலையக தோட்டங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வெற்று காணிகளில் பயிர் செய்கைகள் பயிரிட தோட்டத்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்குவது பற்றி பேச மாட்டீர்களா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் உணவு நெருக்கடி, சிறுபோக பிரச்சினை, உணவு பஞ்சம், உணவு பயிரிடுவது, விகாரைகள் அமைப்பது பற்றி பேசப்பட்டது.ஆனால் மலையக தோட்டத்தொழிலாளர்கள் பற்றி பேசப்படவில்லை. நான் இது பற்றி இதற்கு முன்னரும் அறியப்படுத்தியிருந்தேன்.இந்நாட்டின் மிக முக்கிய சமுகமாக மலையக மக்கள் காணப்படுகின்றனர். அவர்கள் ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவு மாத்திரமே உற்கொள்கின்றனர்.எனவே மலையகத்தில் காணப்படும் வெற்று காணிகளில் பயிர்செய்கைகள் மேற்கொள்ள அவர்களுக்கு தயவு செய்து அனுமதி வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்