மட்டக்களப்பில் வயோதிப பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டு.கருவப்பங்கேணி அம்பிறோஸ் வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய நடராசா கண்மணியம்மா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் 24 ஆம் திகதி இவர் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளார்.
இவரை உறவினர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தேடியுள்ள போதும் இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக இலக்கம் 065-2224422 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.