• May 07 2024

யாழ். - சென்னை விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்று 100வது சேவை! - கேக் வெட்டி கொண்டாட்டம் samugammedia

Chithra / Jun 7th 2023, 1:48 pm
image

Advertisement

சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயான அலையன்ஸ் எயர் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வது விமானச் சேவையை எட்டியுள்ளது.

நூறாவது சேவையை நினைவு கூரும் முகமாக இன்றைய தினம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதுவர், பலாலி விமான நிலைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 100வது அலையன்ஸ் எயார் விமானம் மீண்டும் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை 10,500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் இடர்காலத்தில் இடைநிறுத்தத்திற்குப் பிறகு விமான சேவை 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் தொடங்கியது.

இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழி பயணிகள் போக்குவரத்து டிசம்பர் 12 க்கு இடையில் இன்றுவரை மொத்தம் 10,500 க்கும் அதிகமாக உள்ளது.


யாழ். - சென்னை விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்று 100வது சேவை - கேக் வெட்டி கொண்டாட்டம் samugammedia சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயான அலையன்ஸ் எயர் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வது விமானச் சேவையை எட்டியுள்ளது.நூறாவது சேவையை நினைவு கூரும் முகமாக இன்றைய தினம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.குறித்த நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதுவர், பலாலி விமான நிலைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 100வது அலையன்ஸ் எயார் விமானம் மீண்டும் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை 10,500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணடைந்துள்ளனர்.கொரோனா தொற்றுநோய் இடர்காலத்தில் இடைநிறுத்தத்திற்குப் பிறகு விமான சேவை 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் தொடங்கியது.இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழி பயணிகள் போக்குவரத்து டிசம்பர் 12 க்கு இடையில் இன்றுவரை மொத்தம் 10,500 க்கும் அதிகமாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement