• May 07 2024

பொய் வழக்கு தொடுக்கும் பொலிஸார்: ஒத்துக்கொள்கிறார் நீதி அமைச்சர்! SamugamMedia

Chithra / Mar 18th 2023, 9:15 am
image

Advertisement

போதைப்பொருள் அல்லாத வேறு பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பழிவாங்கும் நோக்கில் ஒருசில பொலிஸார் பொய் வழக்கு தொடுப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், பொது மக்களின் குற்றச்சாட்டில் சில உண்மைகளும் இருக்கின்றன என்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தேடுதலின் போது கைப்பற்றியதாக தெரிவித்து போதைப்பொருள் என தொடர்ந்து 20,30 மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பொலிஸாரினால் அனுப்பப்படுகிறது எனவும்  அனுப்பப்படும் மாதிரிகளில் சில சந்தர்ப்பங்களில் அது போதைப்பொருள் அல்லாததாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சாதாரண மாத்திரைகளை பொலிஸார் போதைப்பொருள் என குறிப்பிட்டு அனுப்புவதாகவும், இது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும் எனவும் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

அதனால் இது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஏனெனில் பெனடொல் குளிசை தூளை வைத்துக்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினால், அவர் போதைப்பொருளை வைத்திருந்திருந்த சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்கப்படுகிறார் என்றும் பின்னர் பல மாதங்களுக்கு பின்னர் இராசாயன பகுப்பாய்வு அறிக்கை வரும்போது, அது போதைப்பொருள் அடங்கியது அல்ல என உறுதிப்படுத்தப்படுகிறது எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில பொலிஸார் பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன எனவும் இவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளில் சில உண்மைகளும் இருக்கின்றன என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

பொய் வழக்கு தொடுக்கும் பொலிஸார்: ஒத்துக்கொள்கிறார் நீதி அமைச்சர் SamugamMedia போதைப்பொருள் அல்லாத வேறு பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பழிவாங்கும் நோக்கில் ஒருசில பொலிஸார் பொய் வழக்கு தொடுப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், பொது மக்களின் குற்றச்சாட்டில் சில உண்மைகளும் இருக்கின்றன என்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.பொலிஸ் தேடுதலின் போது கைப்பற்றியதாக தெரிவித்து போதைப்பொருள் என தொடர்ந்து 20,30 மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பொலிஸாரினால் அனுப்பப்படுகிறது எனவும்  அனுப்பப்படும் மாதிரிகளில் சில சந்தர்ப்பங்களில் அது போதைப்பொருள் அல்லாததாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், சாதாரண மாத்திரைகளை பொலிஸார் போதைப்பொருள் என குறிப்பிட்டு அனுப்புவதாகவும், இது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும் எனவும் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.அதனால் இது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் பெனடொல் குளிசை தூளை வைத்துக்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினால், அவர் போதைப்பொருளை வைத்திருந்திருந்த சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்கப்படுகிறார் என்றும் பின்னர் பல மாதங்களுக்கு பின்னர் இராசாயன பகுப்பாய்வு அறிக்கை வரும்போது, அது போதைப்பொருள் அடங்கியது அல்ல என உறுதிப்படுத்தப்படுகிறது எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.சில பொலிஸார் பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன எனவும் இவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளில் சில உண்மைகளும் இருக்கின்றன என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement