கொழும்பு விக்டோரியா பாலத்தில் பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பாலத்தில் இருந்து களனி ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்டே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை விக்டோரியா பாலத்தில் சார்ஜன்ட் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசி, அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பவற்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.