• May 07 2024

வடமராட்சியில், சற்று முன்னர் கோர விபத்து- ஒருவர் படுகாயம்!

Tamil nila / Jan 22nd 2023, 5:27 pm
image

Advertisement

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சற்று முன்னர் விபத்து ஒன்று இடம் பெற்றதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது 


பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து   உடுத்துறை வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விபத்தில் படுகாயமைந்துள்ளார். அருகிலுள்ள மக்களால் உடனடியாக காயமடைந்தவர் மருதங்கேணி பிரதேச வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.


விபத்து  தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.


சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வடமராட்சியில், சற்று முன்னர் கோர விபத்து- ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சற்று முன்னர் விபத்து ஒன்று இடம் பெற்றதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து   உடுத்துறை வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விபத்தில் படுகாயமைந்துள்ளார். அருகிலுள்ள மக்களால் உடனடியாக காயமடைந்தவர் மருதங்கேணி பிரதேச வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.விபத்து  தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement