• May 07 2024

ஆஸ்திரியாவில் பாதாள அறையில் இருந்து 5 குழந்தைகள் கண்டுப்பிடிப்பு!

Tamil nila / Jan 29th 2023, 9:12 pm
image

Advertisement

ஆஸ்திரியாவில் கைவிடப்பட்ட பாதாள அறை ஒன்றில் பிரித்தானிய குழந்தைகள் ஐவர் உள்ளிட்ட ஆறுபேர் வசிப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  


இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளவர்களுள் ஐந்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஐவர் இருந்ததாகவும், 54 வயதுடைய நபர் ஒருவர் உடனிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறித்த நபர் சமூகசேவையாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த பாதாள அறையும், அங்கு ஐந்து குழந்தைகள் இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 


பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகைத்தந்ததும், குறித்த நபர் பாதாள அறையில் மறைந்துகொண்டதாக கூறப்படுகிறது. 


இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  


அதேநேரம் பாதாள அறையில் பல துப்பாக்கிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும், அதன் சட்டபூர்வ தன்மைக் குறித்தும் ஆராயப்படுகிறது. 

குறித்த 54 வயதுடைய நபர் வலதுசாரி தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடையவர் என நம்பப்படுகிறது. 


ஆஸ்திரியாவில் பாதாள அறையில் இருந்து 5 குழந்தைகள் கண்டுப்பிடிப்பு ஆஸ்திரியாவில் கைவிடப்பட்ட பாதாள அறை ஒன்றில் பிரித்தானிய குழந்தைகள் ஐவர் உள்ளிட்ட ஆறுபேர் வசிப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளவர்களுள் ஐந்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஐவர் இருந்ததாகவும், 54 வயதுடைய நபர் ஒருவர் உடனிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் சமூகசேவையாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த பாதாள அறையும், அங்கு ஐந்து குழந்தைகள் இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகைத்தந்ததும், குறித்த நபர் பாதாள அறையில் மறைந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  அதேநேரம் பாதாள அறையில் பல துப்பாக்கிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும், அதன் சட்டபூர்வ தன்மைக் குறித்தும் ஆராயப்படுகிறது. குறித்த 54 வயதுடைய நபர் வலதுசாரி தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடையவர் என நம்பப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement