சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் ஏற்பாட்டில் தாதியர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது .
மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றி யுத்த நிலைமையின் போது உயிரிழந்த தாதியரின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தாதியர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொல்லப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற தாதிய கல்லூரியின் பணிப்பாளர் ராயூலாதேவி வல்லிபுரநாதன், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ். சுகந்தன், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.