வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை தொடர்ந்தும் இளைய சமூகத்தினருக்கு கடத்தும் நோக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் மக்களின் பங்களிப்புடன் இன்று காலை 8:30 மணியளவில் திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று மாணவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கான அரிசி மற்றும் விறகினை பெற்று திருகோணமலை சிவன்கோவிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து பொதுமக்களிற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.