22வது உலக கிண்ண கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த மாதம் 20ம் திகதி கோலாகலமாக ஆரம்பமாகியது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் இன்றையதினம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இடம்பெற்றது.
இதில் பிரான்சும், ஆர்ஜென்டினாவும் மோதியது.
இதில் இரண்டு அணிகளும் முதலில் 3:3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டது.
பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.
அர்ஜென்டினா. 36 ஆண்டுகளுக்கு பிறகு 3-வது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.
அதேவேளை உலக கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது.